Skip to main content

ஐபிஎல் கிரிக்கெட் மாட்ச்: சில எண்ணங்கள்

T20 என்று சொல்லப்படும் IPL கிரிக்கெட் போட்டியின் ஜுரம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது. சச்சின் வெற்றிகரமாக நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு நம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை சுளுக்கு எடுத்திருக்கிறார். சச்சின் அடிச்சது 12 ரன்தான் , அப்புறம் என்னடா இது என்று கேட்பவர்களுக்கு; ஸ்ரீகாந்த் நேற்று சொன்னது போல, சச்சின் அணிக்கு திரும்பியதே பெரிய டானிக் என்பது போல மும்பை இண்டியன்ஸ் அணி நேற்று சும்மா களை கட்டியது. இதுவரை எந்த போட்டிகளிலும் அதிக ரன் எடுக்காத ஜெயசூர்யா நேற்று பொளந்து கட்டியது நினைவிருக்கலாம். தன் கூட சச்சின் இருப்பதால் தைரியமாக அடிக்கலாம் என முடிவெடுத்த மாதிரி இருந்தது ஜெயசூர்யாவின் ஆட்டம்.

இரண்டாவதாக, சென்னை அணியின் சொதப்பல் ஆட்டம். தோனி, பத்ரிநாத் தவிர மீதி எல்லோரும் எதோ ஒப்புக்கு ஆடிய மாதிரிதான் தோன்றியது. ஸ்டீபன் பிளெமிங் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று தோனி அவரைக் கண்டித்தால் பரவாயில்லை.
_______________________________________________________________________________
ஆரம்பத்தில் ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட வந்தபோது ஏளனத்துடன் பார்த்த எல்லோரும் இப்போது கன்னத்தில் தப்பு போட்டுக் கொள்ளவேண்டும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று எம்ஜிஆர் பாணியில் ஷேன் வார்ன் சும்மா கலக்குகிறார்.

நன்றாக விளையாடி முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்ன், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பின் அணியில் விளையாடாமல் பேசாமல் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி விடலாமா என தீவிரமாக யோசிக்கிறாராம். ஐய்யோ பாவம்.
__________________________________________________________________________________
ஐய்யோ பாவம், டிராவிட்! சும்மா போட்டு எல்லா அணிகளும் அவருடைய அணியை மிதி மிதி என்று மிதித்து விட்டன. என்னதான் நடக்கிறது அந்த அணிக்குள்? ஏன், சொல்லிவைத்த மாதிரி எல்லோரும் எல்லோருமே சொதப்ப வேண்டும்? போதாக் குறையாக இப்போது விஜய் மல்லயா வேறு டிராவிடை வசை பாட ஆரம்பித்து விட்டார். டிராவிட், பேசாமல் ஒரு கிரிக்கெட் கோச்சிங் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டியதுதானே? நல்ல சில்லறை பார்க்கலாம். எப்படி பேட்டிங் செய்யக்கூடாது என்று டிராவிடும், எப்படி பௌலிங் செய்யக்கூடாது என்று கும்ப்ளேயும் வகுப்பு எடுத்தால் எதிர்கால கிரிக்கெட் பிழைக்கும்.
_____________________________________________________________________________________

யுவராஜ் அணி கிடுகிடுவென முன்னேறி வருகிறது. ஆரம்ப தோல்விகளைக் கண்டு தளராமல் இப்போது அணியை நன்றாகக் கையாளும் யுவராஜ் வாழ்க! வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் அவர் இருப்பதாகத் தெரிகிறது. பின்னே, ஒவ்வொரு முறை அணி வெற்றி பெற்றவுடன் ப்ரீத்தி ஜிந்தா ஓடி வந்து, யுவாரஜை (மட்டும்) க்க்கட்டிப் பிடித்து முத்தமிடும் போது ஏன் தோன்றாது? ஸ்ரீசாந்த் இப்போது அழுது புரள்வதை எல்லாம் விட்டுவிட்டு சமர்த்தாக ஆடுகிறார்.
__________________________________________________________________________________
டெல்லி அணி ஷேவாக்கை மட்டுமே நம்பாமல் மற்றவர்களையும் பெண்டு எடுப்பது நல்லது. ஷேவாக் அவுட் ஆனால் அணி திணற ஆரம்பித்து விடுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணியில் ஷோயப் அக்தர் புயல் மாதிரி நுழைந்து, அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தியதும் வெலவெலத்துப் போய்விட்டது டெல்லி டீம். சென்னை அணியிடம் கடைசி பந்தில் தோற்றதும் நினைவிருக்கலாம்.
____________________________________________________________________________________
டெக்கான் சார்ஜர்ஸ் என்றெல்லாம் பேர் வைத்துக்கொண்டு சார்ஜே இல்லாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறது ஹைதரபாத் அணி. விவிஎஸ் லக்ஷ்மண் பாவம், தடுமாறுகிறார். ஸ்டைரிஸ் என்னோமோ நன்றாகத் தான் பௌலிங் செய்கிறார். வேணுகோபால் ராவ், ரோஹித ஷர்மா ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்தாலும், கன்சிஸ்டன்சி இல்லை. ஷாயித் அபிரிதி படு மோசம். சமிந்தா வாஸ்???

கடைசி அணியாக வர, இந்த அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் நல்ல போட்டி இருக்கும்
_____________________________________________________________________________________
கங்குலியின் நைட் ரைடர்ஸ் அணி சமாளித்துக்கொண்டு மேலே வந்திருக்கிறது. ஷருக்கான் என்ன சீன் போட்டாலும், கங்குலி இதுவரை முக்கி முனகி டீமை ஒப்பேற்றி கொண்டுவந்திருக்கிறார்.

தற்போது ஷோயப் அக்தரின் வருகை அணியை பலப்படுத்தி இருக்கிறதா அல்லது அவர் ஒன் மேட்ச் வொண்டரா என்று அடுத்த மேட்ச்சில்தான் தெரியும்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்