Skip to main content

ஐபிஎல் கிரிக்கெட் மாட்ச்: சில எண்ணங்கள்

T20 என்று சொல்லப்படும் IPL கிரிக்கெட் போட்டியின் ஜுரம் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது. சச்சின் வெற்றிகரமாக நேற்றைய போட்டியில் கலந்து கொண்டு நம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை சுளுக்கு எடுத்திருக்கிறார். சச்சின் அடிச்சது 12 ரன்தான் , அப்புறம் என்னடா இது என்று கேட்பவர்களுக்கு; ஸ்ரீகாந்த் நேற்று சொன்னது போல, சச்சின் அணிக்கு திரும்பியதே பெரிய டானிக் என்பது போல மும்பை இண்டியன்ஸ் அணி நேற்று சும்மா களை கட்டியது. இதுவரை எந்த போட்டிகளிலும் அதிக ரன் எடுக்காத ஜெயசூர்யா நேற்று பொளந்து கட்டியது நினைவிருக்கலாம். தன் கூட சச்சின் இருப்பதால் தைரியமாக அடிக்கலாம் என முடிவெடுத்த மாதிரி இருந்தது ஜெயசூர்யாவின் ஆட்டம்.

இரண்டாவதாக, சென்னை அணியின் சொதப்பல் ஆட்டம். தோனி, பத்ரிநாத் தவிர மீதி எல்லோரும் எதோ ஒப்புக்கு ஆடிய மாதிரிதான் தோன்றியது. ஸ்டீபன் பிளெமிங் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று தோனி அவரைக் கண்டித்தால் பரவாயில்லை.
_______________________________________________________________________________
ஆரம்பத்தில் ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட வந்தபோது ஏளனத்துடன் பார்த்த எல்லோரும் இப்போது கன்னத்தில் தப்பு போட்டுக் கொள்ளவேண்டும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று எம்ஜிஆர் பாணியில் ஷேன் வார்ன் சும்மா கலக்குகிறார்.

நன்றாக விளையாடி முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்ன், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பின் அணியில் விளையாடாமல் பேசாமல் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி விடலாமா என தீவிரமாக யோசிக்கிறாராம். ஐய்யோ பாவம்.
__________________________________________________________________________________
ஐய்யோ பாவம், டிராவிட்! சும்மா போட்டு எல்லா அணிகளும் அவருடைய அணியை மிதி மிதி என்று மிதித்து விட்டன. என்னதான் நடக்கிறது அந்த அணிக்குள்? ஏன், சொல்லிவைத்த மாதிரி எல்லோரும் எல்லோருமே சொதப்ப வேண்டும்? போதாக் குறையாக இப்போது விஜய் மல்லயா வேறு டிராவிடை வசை பாட ஆரம்பித்து விட்டார். டிராவிட், பேசாமல் ஒரு கிரிக்கெட் கோச்சிங் ஸ்கூல் ஆரம்பிக்க வேண்டியதுதானே? நல்ல சில்லறை பார்க்கலாம். எப்படி பேட்டிங் செய்யக்கூடாது என்று டிராவிடும், எப்படி பௌலிங் செய்யக்கூடாது என்று கும்ப்ளேயும் வகுப்பு எடுத்தால் எதிர்கால கிரிக்கெட் பிழைக்கும்.
_____________________________________________________________________________________

யுவராஜ் அணி கிடுகிடுவென முன்னேறி வருகிறது. ஆரம்ப தோல்விகளைக் கண்டு தளராமல் இப்போது அணியை நன்றாகக் கையாளும் யுவராஜ் வாழ்க! வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் அவர் இருப்பதாகத் தெரிகிறது. பின்னே, ஒவ்வொரு முறை அணி வெற்றி பெற்றவுடன் ப்ரீத்தி ஜிந்தா ஓடி வந்து, யுவாரஜை (மட்டும்) க்க்கட்டிப் பிடித்து முத்தமிடும் போது ஏன் தோன்றாது? ஸ்ரீசாந்த் இப்போது அழுது புரள்வதை எல்லாம் விட்டுவிட்டு சமர்த்தாக ஆடுகிறார்.
__________________________________________________________________________________
டெல்லி அணி ஷேவாக்கை மட்டுமே நம்பாமல் மற்றவர்களையும் பெண்டு எடுப்பது நல்லது. ஷேவாக் அவுட் ஆனால் அணி திணற ஆரம்பித்து விடுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணியில் ஷோயப் அக்தர் புயல் மாதிரி நுழைந்து, அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தியதும் வெலவெலத்துப் போய்விட்டது டெல்லி டீம். சென்னை அணியிடம் கடைசி பந்தில் தோற்றதும் நினைவிருக்கலாம்.
____________________________________________________________________________________
டெக்கான் சார்ஜர்ஸ் என்றெல்லாம் பேர் வைத்துக்கொண்டு சார்ஜே இல்லாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறது ஹைதரபாத் அணி. விவிஎஸ் லக்ஷ்மண் பாவம், தடுமாறுகிறார். ஸ்டைரிஸ் என்னோமோ நன்றாகத் தான் பௌலிங் செய்கிறார். வேணுகோபால் ராவ், ரோஹித ஷர்மா ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்தாலும், கன்சிஸ்டன்சி இல்லை. ஷாயித் அபிரிதி படு மோசம். சமிந்தா வாஸ்???

கடைசி அணியாக வர, இந்த அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் நல்ல போட்டி இருக்கும்
_____________________________________________________________________________________
கங்குலியின் நைட் ரைடர்ஸ் அணி சமாளித்துக்கொண்டு மேலே வந்திருக்கிறது. ஷருக்கான் என்ன சீன் போட்டாலும், கங்குலி இதுவரை முக்கி முனகி டீமை ஒப்பேற்றி கொண்டுவந்திருக்கிறார்.

தற்போது ஷோயப் அக்தரின் வருகை அணியை பலப்படுத்தி இருக்கிறதா அல்லது அவர் ஒன் மேட்ச் வொண்டரா என்று அடுத்த மேட்ச்சில்தான் தெரியும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...