Skip to main content

Batu Caves முருகன்




இதற்கு முன் பலமுறை மலேசியா வந்திருந்தாலும் பதுகை (Batu Caves) முருகன் கடைக்கண் பார்வை என் மேல் படாததால் அவர் தரிசனம் கிட்டவில்லை. இந்த முறை எப்படியாவது அவரைப் பார்த்து விட வேண்டுமெனத் தீர்மானித்து ரவியுடன் 22 ம் தேதி காலையில் சென்று விட்டோம். கோலாலம்பூரில் இருந்து 10 கீ.மீ தூரம் கூட இல்லை. மலை அடிவாரத்தில் இறங்கும்போதே 140 அடி உயரத்தில் தகதகக்கும் தங்க நிறத்தில் மிக பிரமாண்டமான முருகன், எனக்கு முன்னால் நீங்கள் எல்லாம் தூசுடா என்பது மாதிரி மிக உயர்ந்து நிற்கிறார்.

கிட்டத்தட்ட 250 டன் இரும்பும், 1500m3 (cubic meter) கான்க்ரீடும், 300 லி தங்க பெயிண்டும் சேர்ந்து சுமார் 2 கோடி (இந்திய மதிப்பில்) செலவில் அமைக்கப்பட்ட இந்த முருகன் உலகிலேயே மிக உயரமான ஹிந்துக் கடவுள் என்ற பெருமை பெறுகிறார்.

1890 ம் ஆண்டு தம்புசாமி பிள்ளை என்பவரால் இங்கு முருகன் (மூலவர்) பிரதிஷ்டை செய்யப்பட்டார். பிறகு, 1892 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தைப் பூசம் அன்றும் இந்த கோயிலில் மிக விசேஷமான பூஜைகள் இன்று வரை தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.

இந்த சுண்ணாம்புக்கல் குகை அமைப்பு கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சரித்திரம் சொல்லுகிறது. தரை மட்டத்திலிருந்து 130 மீ உயரத்தில் இருக்கும் இந்த குகைக்கு செல்ல செங்குத்தான 270 படிகளைக் கடக்க வேண்டும் (மூச்சு வாங்க ஏறினோம்). மிகச் சின்ன குடவரைக் கோயிலான இதில் மூர்த்தியும் சிறியவராகவே இருக்கிறார் என்றாலும் கீர்த்தி ரொம்பப் பெரியது என்பதால் ஒவ்வொரு தைப் பூசம் அன்றும் கிட்டத்தட்ட 15 லட்சம் பக்தர்கள் கூடுவது ஒரு சாதனை என்கிறார்கள். மலேசியா அரசாங்கம் தை பூசம் அன்று அரசு விடுமுறை தினம் என்று அறிவித்து விட்டது.




முருகன் தரிசனம் கிடைத்ததால்தான் என் மலேசியா பயணத்தின் business objective முழுமையாக ஈடேறியது என்று நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...