Skip to main content

Batu Caves முருகன்




இதற்கு முன் பலமுறை மலேசியா வந்திருந்தாலும் பதுகை (Batu Caves) முருகன் கடைக்கண் பார்வை என் மேல் படாததால் அவர் தரிசனம் கிட்டவில்லை. இந்த முறை எப்படியாவது அவரைப் பார்த்து விட வேண்டுமெனத் தீர்மானித்து ரவியுடன் 22 ம் தேதி காலையில் சென்று விட்டோம். கோலாலம்பூரில் இருந்து 10 கீ.மீ தூரம் கூட இல்லை. மலை அடிவாரத்தில் இறங்கும்போதே 140 அடி உயரத்தில் தகதகக்கும் தங்க நிறத்தில் மிக பிரமாண்டமான முருகன், எனக்கு முன்னால் நீங்கள் எல்லாம் தூசுடா என்பது மாதிரி மிக உயர்ந்து நிற்கிறார்.

கிட்டத்தட்ட 250 டன் இரும்பும், 1500m3 (cubic meter) கான்க்ரீடும், 300 லி தங்க பெயிண்டும் சேர்ந்து சுமார் 2 கோடி (இந்திய மதிப்பில்) செலவில் அமைக்கப்பட்ட இந்த முருகன் உலகிலேயே மிக உயரமான ஹிந்துக் கடவுள் என்ற பெருமை பெறுகிறார்.

1890 ம் ஆண்டு தம்புசாமி பிள்ளை என்பவரால் இங்கு முருகன் (மூலவர்) பிரதிஷ்டை செய்யப்பட்டார். பிறகு, 1892 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தைப் பூசம் அன்றும் இந்த கோயிலில் மிக விசேஷமான பூஜைகள் இன்று வரை தொடர்ந்து நடந்தேறி வருகின்றன.

இந்த சுண்ணாம்புக்கல் குகை அமைப்பு கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சரித்திரம் சொல்லுகிறது. தரை மட்டத்திலிருந்து 130 மீ உயரத்தில் இருக்கும் இந்த குகைக்கு செல்ல செங்குத்தான 270 படிகளைக் கடக்க வேண்டும் (மூச்சு வாங்க ஏறினோம்). மிகச் சின்ன குடவரைக் கோயிலான இதில் மூர்த்தியும் சிறியவராகவே இருக்கிறார் என்றாலும் கீர்த்தி ரொம்பப் பெரியது என்பதால் ஒவ்வொரு தைப் பூசம் அன்றும் கிட்டத்தட்ட 15 லட்சம் பக்தர்கள் கூடுவது ஒரு சாதனை என்கிறார்கள். மலேசியா அரசாங்கம் தை பூசம் அன்று அரசு விடுமுறை தினம் என்று அறிவித்து விட்டது.




முருகன் தரிசனம் கிடைத்ததால்தான் என் மலேசியா பயணத்தின் business objective முழுமையாக ஈடேறியது என்று நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்