Skip to main content

நீங்கள் "helicopter parent" ஆ?


என்னய்யா இது? நான் ஹெலிகாப்டரில் போனதே இல்லை, என்னைப் போய் நீங்கள் ஹெலிகாப்டர் பேரன்ட்டா என்று கேட்டால் என்ன நியாயம் என்று கேட்கிறீர்களா?

பொறுமை, பொறுமை. நம்மில் பலருக்கு நம் குழந்தைகள் என்ன வகுப்பில் படிக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் நம் குழந்தைகள் மேல் (குறிப்பாக அவர்கள் படிப்பின் மேல்) ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னால் கூட கேட்காமல் விழுந்து, விழுந்து அவர்களுடைய படிப்பில் உதவி செய்கிறோம் என்ற பேரில் உபத்திரவம் செய்கிறோம் என்றால் நமக்கு பெயர் "ஹெலிகாப்டர் பேரன்ட்."

இதில் சில பெற்றோர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தைகளுடைய record books, assignments, essays/experiments இவை எல்லாவற்றையும் கூட எழுதிக் கொடுப்பார்கள். இவர்களுக்கு கூடுதலாக "மிலிடரி ஹெலிகாப்டர் பேரன்ட்"

அது சரி, இதற்கு ஏன் ஹெலிகாப்டர் பேரன்ட் என்ற பெயர் என்றால் இதைபோன்ற பெற்றோர்கள் ஒரு ஹெலிகாப்டரைப் போல குழந்தைகளுக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருப்பதால் (hovering around) இந்தப் பெயர்.

உலகின் சில தேர்ந்த சைக்காலஜிஸ்ட்கள் இது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல என்கிறார்கள். குழந்தைகள் இயற்கையாக அவர்களுடைய குணநலன்களை வளர்த்துக் கொள்ள இது ஒரு தடையாக இருக்குமென நினைக்கிறார்கள். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகளைச் சேர்க்க செல்லும்போது பெற்றோரைப் பார்த்து "are you a helicopter parent?" என்று கேட்கிறார்கள்.

சமீபத்தில் என்னுடைய மகள் Ananyaa வை கோபாலபுரத்தில் உள்ள DAV பள்ளியில் சேர்த்தோம். அப்போது என் மகளுடன் சென்றிருந்த என் மனைவியிடம் இந்த கேள்வி (are you a helicopter parent?) கேட்கப்படிருக்கிறது. அவளால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், நுழைவுத் தேர்வு (entrance test) மற்றும் நேர்முகம் (interview) மூலம் என் மகளுக்கு அட்மிஷன் கொடுத்து விட்டார்கள். என் மனைவி இதை என்னிடம் கேட்டபோது நான் இணையத்தில் (internet) தேடியபோது கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

மேலும் சில தகவல்களுக்கு: http://www.utexas.edu/features/2007/helicopter

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்