Skip to main content

நீங்கள் "helicopter parent" ஆ?


என்னய்யா இது? நான் ஹெலிகாப்டரில் போனதே இல்லை, என்னைப் போய் நீங்கள் ஹெலிகாப்டர் பேரன்ட்டா என்று கேட்டால் என்ன நியாயம் என்று கேட்கிறீர்களா?

பொறுமை, பொறுமை. நம்மில் பலருக்கு நம் குழந்தைகள் என்ன வகுப்பில் படிக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் நம் குழந்தைகள் மேல் (குறிப்பாக அவர்கள் படிப்பின் மேல்) ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னால் கூட கேட்காமல் விழுந்து, விழுந்து அவர்களுடைய படிப்பில் உதவி செய்கிறோம் என்ற பேரில் உபத்திரவம் செய்கிறோம் என்றால் நமக்கு பெயர் "ஹெலிகாப்டர் பேரன்ட்."

இதில் சில பெற்றோர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தைகளுடைய record books, assignments, essays/experiments இவை எல்லாவற்றையும் கூட எழுதிக் கொடுப்பார்கள். இவர்களுக்கு கூடுதலாக "மிலிடரி ஹெலிகாப்டர் பேரன்ட்"

அது சரி, இதற்கு ஏன் ஹெலிகாப்டர் பேரன்ட் என்ற பெயர் என்றால் இதைபோன்ற பெற்றோர்கள் ஒரு ஹெலிகாப்டரைப் போல குழந்தைகளுக்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருப்பதால் (hovering around) இந்தப் பெயர்.

உலகின் சில தேர்ந்த சைக்காலஜிஸ்ட்கள் இது ஒரு ஆரோக்கியமான விஷயம் அல்ல என்கிறார்கள். குழந்தைகள் இயற்கையாக அவர்களுடைய குணநலன்களை வளர்த்துக் கொள்ள இது ஒரு தடையாக இருக்குமென நினைக்கிறார்கள். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகளைச் சேர்க்க செல்லும்போது பெற்றோரைப் பார்த்து "are you a helicopter parent?" என்று கேட்கிறார்கள்.

சமீபத்தில் என்னுடைய மகள் Ananyaa வை கோபாலபுரத்தில் உள்ள DAV பள்ளியில் சேர்த்தோம். அப்போது என் மகளுடன் சென்றிருந்த என் மனைவியிடம் இந்த கேள்வி (are you a helicopter parent?) கேட்கப்படிருக்கிறது. அவளால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், நுழைவுத் தேர்வு (entrance test) மற்றும் நேர்முகம் (interview) மூலம் என் மகளுக்கு அட்மிஷன் கொடுத்து விட்டார்கள். என் மனைவி இதை என்னிடம் கேட்டபோது நான் இணையத்தில் (internet) தேடியபோது கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

மேலும் சில தகவல்களுக்கு: http://www.utexas.edu/features/2007/helicopter

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...