Skip to main content

எழுத்தாளர் சுஜாதா எனும் ஜீனியஸ்: ஒரு ரசிகனின் அஞ்சலி




நேற்று இரவு சுமார் 10 மணிக்கு சுஜாதா காலமான செய்தி, எனக்கு சற்று தாமதமாக இன்று காலைதான் தெரிந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக அவருடைய எழுத்துக்களை விடாமல் துரத்தும் ஒரு ரசிகன் என்கிற முறையில் என்னால் மனப்பூர்வமான அஞ்சலியை மட்டுமே செலுத்த முடியும்.

ஒரு எழுத்தாளனின் நடை, எழுத்தாக்கம், உணர்வு இவற்றையெல்லாம் மீறி எனக்கு (என்னைபோன்ற எத்தனையோ பேருக்கு) சுஜாதா பல விஷயங்களில் ஒரு மானசீக குரு என்றுதான் சொல்லவேண்டும்.

அவர் நன்றாக இருக்கிறது என்று கைகாட்டிய நிறைய கவிதைகளை, கதைகளை வாசித்திருக்கிறேன்: அவரால் சிலாகிக்கப்பட்ட திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்;அவர் சொன்ன கட்டுரைகளை இணையதளத்தில் தேடிப்பிடித்து download செய்து படித்திருக்கிறேன்; அவர் வசனம் எழுதிய ஒரே காரணத்தால் விசில், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற குப்பையான படங்களையும் பார்த்திருக்கிறேன்.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலே பிறந்த நிறைய குழந்தைகளுக்கு (என் வாரிசுகள் உட்பட) தமிழ் படிக்கவே தெரியாத காலத்தில், சுஜாதாவின் எழுத்து மூலம் நிறையவே கற்றுக்கொண்டேன் என்றால் அது மிகையாகாது. அவர் தந்தை இறக்கும்போது அவருக்கு வயது 93 என்று படித்திருக்கிறேன். அவருடைய தந்தையின் மறைவைப் பற்றி குமுதத்தில் எழுதும்போது, " மறுபடியும் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வர, அவசர அவசரமாக KPN பஸ் பிடித்து (அப்போது சுஜாதா பெங்களூரில் இருந்தார்) சேலம் சென்றேன். கவலையுடன் இருந்த என்னைப் பார்த்த கண்டக்டர் என்ன சார அடிக்கடி வரீங்க?
என்றார்.அப்பாவுக்கு உடம்பு சரியில்லைப்பா என்றேன். ஓகோ, அப்படியா, டே அந்த மொளகா மூட்டைய பாத்து எறக்குடா," அந்த சமயத்திலும் அவருடைய நகைச்சுவை உணர்வு தலைதூக்கியதை ரசித்திருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன், அவர் BEL நிறுவனத்தில் பணி புரியும் போது LTC எடுத்துக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் காரில் ஊர் சுற்றியதைப் பற்றி (தமிழ்நாடு 2000 மைல்) எழுதும் போது, "வீட்டை விட்டு வெளியே வந்து கொரமங்கலாவை நெருங்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற சத்தம் கேட்கவே, ஐய்யோ கார் டயர் பஞ்சராகிவிட்டதா என்று பதட்டத்துடன் கீழே இறங்கிப் பார்த்தால். ஒன்றுமில்லை. என் இரண்டாவது மகன் நான்தான் அப்படி சத்தம் செய்தேன் என்றான். ஏற்கனவே லேட் என்பதால் அவனை சவட்டும் எண்ணத்தை ஒத்திப் போட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்தேன்" என்று எழுதி இருப்பார்.

நான், என் நண்பன் நாகு (என்னைபோலவே இன்னொரு தீவிர சுஜாதா ரசிகன்) எல்லோருக்கும் அப்போது இருந்த ஒரு பேராசை: சுஜாதா கதை வசனம் எழுத, கமல் நடிக்க, இளையராஜா இசை அமைக்க ஒரு படம் வரவேண்டும் என்பதுதான். அது விக்ரம் படம் மூலம் நிறைவேறினாலும், துரதிருஷ்டவசமாக அந்த படம் ஓடாமல் போனாலும் அதை எவ்வளவோ முறைப் பார்த்து ரசித்தோம்.

அவர் எழுத்துக்கு என்றும் வயதாவதில்லை. நான் சாகும் வரை அவற்றை படித்து ரசிக்கத்தான் போகிறேன்.

அவருடைய ஆன்மா எல்லாம் வல்ல (அவருடைய இஷ்ட தெய்வமான) ஸ்ரீரங்கநாதனின் பாதங்களை அடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

Comments

Unknown said…
ராம்...நானும் உங்களைப்போல் ஒருவன். சுஜாதாவை படித்து படித்து....நம் நினைவு தவறும் வரை சுஜாதாவை மறக்க முடியாது. போயிட்டாரே மனுஷன். "ஒருத்தரும் அவுட்டே ஆக மாட்டாங்க என்று கிரிக்கெட்டில் ரூல் இருந்தால், அந்த ஆட்டம் ரசிக்குமா?" என்று மரணத்தை அழகாக எளிமையாக நியாயப்படுத்தியவர். ஆனால் அவர் மறைந்ததை நம்மால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே...5 வருஷங்கள் ஆயிடுச்சு...

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்