Skip to main content

உலகம் அழியும்போது நம் அரிசி அழியாது!

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை எவ்வளவு பேர் படித்திருப்பீர்கள் எனத் தெரியாது. நான் படித்திருக்கிறேன். அதில் ஒரு மிகப் பிரமாண்டமான வெள்ளத்தைப் பற்றி குறிப்பு இருக்கிறது. அந்த வெள்ளத்தின் போது ஜீசஸின் கட்டளையை ஏற்று நோவா என்பவர் ஒரு பெரிய படகு ஒன்றை தயாரிக்கிறார். உலகின் அனைத்து உயிரினங்களையும் காப்பற்றவேண்டி, எல்லா மிருகங்கள், பறவைகள் மற்ற உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடியை தன்னுடைய படகில் ஏற்று செல்கிறார். Noah"s Ark எனப்படும் இந்த படகுதான் பின்னாளில் உலகத்தில் மற்ற ஜீவராசிகள் வர முக்கியமான காரணம் என்று சொல்வார்கள்.

இப்போது நம் உலகம் அழிவுப் பாதையில் போய்க் கொண்டிருப்பதால், விஞ்ஞானிகள் ஒரு மிகப் பெரிய vault ஒன்றை Artic பிரதேசத்தில் கட்டி, அதனுள் உலகின் ஒவ்வொரு தாவர வகைகளின் மாதிரியையும் காப்பாற்ற எண்ணற்ற விதைகளை (கிட்டத்தட்ட4.5 மில்லியன்) பாதுகாக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

உலகின் அனைத்து தாவர வகைகளும் இங்கு பாதுகாப்பாக வைத்துவிட்டால், எதிர்காலத்தில் உலகம் அழிந்துவிட்டால், மறுபடியும் இந்த தாவர விதைகளைக் கொண்டு உலகைக் காப்பாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். உலகின் ஒரு மூலையில், வட துருவத்தில் இருந்து 1000 கி.மி தூரத்தில் நார்வே நாட்டின் ஒரு மூலையில் இந்த இடம் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் உயரத்தில் Svalbard இருக்கிறது. பெல்ஜியம் நாட்டை விட பெரிதான இந்த ஊரில் மொத்தமே 2300 பேர்தான் வசிக்கிறார்கள். காரணம் இந்த ஊரின் குளிர், பனி, எதுவுமே வளராத தன்மை.

இந்த vault எப்போதுமே மைனஸ் 18 டிகிரியில் இருக்குபடி அமைக்கபட்டிருக்கிறது. ஒருவேளை மின்சாரம் இல்லை என்றால் கூட இந்த ஊரின் தட்பவெட்பமே மைனஸ் 3.5 டிகிரிக்குமேல் போகாது என்பதால் எக்காலத்திலும் இந்த விதைகள் கெட்டுப் போக வாய்ப்பில்லை. முக்கியமாக, ஒரு வேளை அருகில் இருக்கும் கிரீன்லாந்தோ, ஆர்டிக் பிரதேசமோ முழுவதும் கரைந்து வெள்ளம் வந்தால் கூட, கடல் மட்டத்திலிருந்து 130 மீ மேல் இருப்பதால் ஒரு விதை கூட பாதிக்காது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

எனக்குள் இருக்கும் Doubting Thomas (இவரும் ஒரு பைபிள் கதாபாத்திரம்தான்) கேட்கும் கேள்வி: உலகமே அழிந்துவிட்டால், அப்புறம் யாருக்கு இந்த விதைகள் எல்லாம் பயன்படப் போகின்றன?

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்