Skip to main content

கோடியில் விலை போகும் கிரிக்கெட் வீரர்கள்! நாம் இருப்பது இந்தியாதானா ?























என்னதான் நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்றாலும், மிகுந்த எரிச்சலுடன், என் கருத்தை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்:

கொஞ்ச நாட்களுக்கு முன் கோடிகளைக் கொட்டி பண முதலைகள்...மன்னிக்கவும், முதலாளிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் IPL அணிகளை வாங்கிய செய்தியை நாம் அறிவோம். இன்று அதைவிட பெரிய கூத்து நடந்திருக்கிறது; உலகெங்கிலும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை bidding மூலம் ஒவ்வொரு அணியின் முதலாளியும் வாங்கியிருக்கிறார்கள். எல்லாமே கோடியில்தான்.

இந்த bidding நேர்மையாக நடக்க வேண்டுமென லண்டனைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான Chrirstie மூலம் இந்த ஏலம் நடந்துள்ளது. கன்னாபின்னா என்று விலை எகிறக் கூடாதென்று, ஒரு அணிக்கு குறைந்த பட்சம் US$ 1.5 மில்லியன் (ரூ.6 கோடி) அதிக பட்சம் US$5 மில்லியன் (ரூ.20 கோடி) என்றும் அளவீடு (capping) கொடுக்கப்பட்டது. இந்தத் தொகை மொத்த அணிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதில் ரொம்ப புத்திசாலித்தனமாக இந்தியாவின் மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், சௌரவ் கங்குலி ஆகியோர்களை "Icon Players" என்று வகைப்படுத்தி இவர்கள் ஏலத்திற்கு அப்பாற்பட்டவர்கள், எதையும் தாண்டி புனிதமானவர்கள் என்று சொல்லிவிட, இவர்கள் எல்லோருமே அவரவர் home team க்குதான் விளையாடுவோம் என்று சொல்லிவிட்டார்கள் (இதற்கு இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.6 கோடி கொடுக்கலாம் என BCCI பரிந்துரை (recommendation) செய்ததாக சில TV Channel கள் செய்தி வெளியிட்டன. இவை எல்லாமே இன்றைய bidding நடப்பதற்கு முன்.

இன்றைய bidding நடந்தபிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய இளைய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான M S Dhoni அதிகபட்ச விலைக்கு சென்னையின் Super Kings அணி ரூ.6 கோடிக்கு வாங்கிவிட்டது. அதன் பின் கும்ப்லேயில் ஆரம்பித்து நிறைய இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை கோடிகளைக் கொட்டி ஒவ்வொரு அணியின் முதலாளிகளும் வாங்கிவிட்டனர்.

இதில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், கில் கிறிஸ்ட், ஷேன் வார்ன் (தமிழ் புத்தகங்களும், பத்திரிகைகளும், TV Channel களும் இவர் பெயரை ஷேன் வார்னே என்று குறிப்பிட்டு எரிச்சலூட்டுகிறார்கள்), பிரெட் லீ, மாத்யூ ஹேடன் ஆகியோரையும் வெவ்வேறு அணியினர் வாங்கியுள்ள நிலையில், ஹைதராபாத் அணிக்காக அன்ட்ரூ சைமண்ட்சை ரூ.5.6கோடி கொடுத்து வாங்கியிருப்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை. சைமண்ட்ஸ் அவ்வளவு பெரிய வீரரா என்று கிரிக்கெட் வல்லுனர்கள் யாராவது விளக்கினால் தேவலை!

பாவம், ஆஸ்திரேலியாவின் க்லென் மெக்ராவையும், பாகிஸ்தானின் மொஹமத் யூஸப் ஆகிய இருவரையும் இன்னும் எந்த அணியும் சீண்டவில்லை.

இதில் உனக்கென்ன வருத்தம் என்று கேட்பவர்களுக்கு; இவ்வளவு கோடிகளைக் கொட்டி கிரிக்கெட் வீரர்களை வாங்கும் இந்த முதலாளிகள், ஏன் இன்னும் மின்சார வசதி கூட வராத 1800 கிராமங்களை தத்து எடுத்து எதாவது நல்லது செய்யக்கூடாதா? அது சரி, அது நம் அரசின் வேலையல்லவா?

நம் கிரிக்கெட் அணிகளின் முதலாளிகளின் தற்போதைய தலையாய வேலை டோனி, யுவராஜ் சிங், சச்சின் போன்ற எண்ணற்ற ஏழைகளின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதுதானே?

http://www.ibnlive.com/news/ipl-showers-money-on-players-dhoni-tops-charts/59410-5-p1.html

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்