Skip to main content

கோடியில் விலை போகும் கிரிக்கெட் வீரர்கள்! நாம் இருப்பது இந்தியாதானா ?























என்னதான் நானும் ஒரு கிரிக்கெட் ரசிகன் என்றாலும், மிகுந்த எரிச்சலுடன், என் கருத்தை உங்களுடன் பரிமாறிக் கொள்கிறேன்:

கொஞ்ச நாட்களுக்கு முன் கோடிகளைக் கொட்டி பண முதலைகள்...மன்னிக்கவும், முதலாளிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் IPL அணிகளை வாங்கிய செய்தியை நாம் அறிவோம். இன்று அதைவிட பெரிய கூத்து நடந்திருக்கிறது; உலகெங்கிலும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை bidding மூலம் ஒவ்வொரு அணியின் முதலாளியும் வாங்கியிருக்கிறார்கள். எல்லாமே கோடியில்தான்.

இந்த bidding நேர்மையாக நடக்க வேண்டுமென லண்டனைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான Chrirstie மூலம் இந்த ஏலம் நடந்துள்ளது. கன்னாபின்னா என்று விலை எகிறக் கூடாதென்று, ஒரு அணிக்கு குறைந்த பட்சம் US$ 1.5 மில்லியன் (ரூ.6 கோடி) அதிக பட்சம் US$5 மில்லியன் (ரூ.20 கோடி) என்றும் அளவீடு (capping) கொடுக்கப்பட்டது. இந்தத் தொகை மொத்த அணிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதில் ரொம்ப புத்திசாலித்தனமாக இந்தியாவின் மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், சௌரவ் கங்குலி ஆகியோர்களை "Icon Players" என்று வகைப்படுத்தி இவர்கள் ஏலத்திற்கு அப்பாற்பட்டவர்கள், எதையும் தாண்டி புனிதமானவர்கள் என்று சொல்லிவிட, இவர்கள் எல்லோருமே அவரவர் home team க்குதான் விளையாடுவோம் என்று சொல்லிவிட்டார்கள் (இதற்கு இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.6 கோடி கொடுக்கலாம் என BCCI பரிந்துரை (recommendation) செய்ததாக சில TV Channel கள் செய்தி வெளியிட்டன. இவை எல்லாமே இன்றைய bidding நடப்பதற்கு முன்.

இன்றைய bidding நடந்தபிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இன்றைய இளைய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான M S Dhoni அதிகபட்ச விலைக்கு சென்னையின் Super Kings அணி ரூ.6 கோடிக்கு வாங்கிவிட்டது. அதன் பின் கும்ப்லேயில் ஆரம்பித்து நிறைய இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை கோடிகளைக் கொட்டி ஒவ்வொரு அணியின் முதலாளிகளும் வாங்கிவிட்டனர்.

இதில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், கில் கிறிஸ்ட், ஷேன் வார்ன் (தமிழ் புத்தகங்களும், பத்திரிகைகளும், TV Channel களும் இவர் பெயரை ஷேன் வார்னே என்று குறிப்பிட்டு எரிச்சலூட்டுகிறார்கள்), பிரெட் லீ, மாத்யூ ஹேடன் ஆகியோரையும் வெவ்வேறு அணியினர் வாங்கியுள்ள நிலையில், ஹைதராபாத் அணிக்காக அன்ட்ரூ சைமண்ட்சை ரூ.5.6கோடி கொடுத்து வாங்கியிருப்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை. சைமண்ட்ஸ் அவ்வளவு பெரிய வீரரா என்று கிரிக்கெட் வல்லுனர்கள் யாராவது விளக்கினால் தேவலை!

பாவம், ஆஸ்திரேலியாவின் க்லென் மெக்ராவையும், பாகிஸ்தானின் மொஹமத் யூஸப் ஆகிய இருவரையும் இன்னும் எந்த அணியும் சீண்டவில்லை.

இதில் உனக்கென்ன வருத்தம் என்று கேட்பவர்களுக்கு; இவ்வளவு கோடிகளைக் கொட்டி கிரிக்கெட் வீரர்களை வாங்கும் இந்த முதலாளிகள், ஏன் இன்னும் மின்சார வசதி கூட வராத 1800 கிராமங்களை தத்து எடுத்து எதாவது நல்லது செய்யக்கூடாதா? அது சரி, அது நம் அரசின் வேலையல்லவா?

நம் கிரிக்கெட் அணிகளின் முதலாளிகளின் தற்போதைய தலையாய வேலை டோனி, யுவராஜ் சிங், சச்சின் போன்ற எண்ணற்ற ஏழைகளின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதுதானே?

http://www.ibnlive.com/news/ipl-showers-money-on-players-dhoni-tops-charts/59410-5-p1.html

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...