Skip to main content

ஜொள்ளித் திரிந்த காலம்!





என்னுடைய மேற்பட்ட புகைப்படத்தைப் பார்த்தவுடன், உங்களில் பலருக்கு நான் ஏன் வசந்த் & கோ முதலாளி மாதிரி போஸ் கொடுக்கிறேன், அப்படி என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறேன் என்று மனதில் கேள்வி எழும். என்னுடைய office இல் சமீபத்தில் photo shoot ஒன்று எடுத்தோம், எங்களுடைய VirtuIndia Office brochure க்காக. அதற்கு வந்த photographer போனால் போகிறது என்று என்னை எடுத்த photo வை உங்களுக்கு வேறு எப்படி காண்பிப்பது?

என் படத்தைப் போட்டு விட்டதால் கொஞ்சம் சுயபுராணம் பாடினால் என்ன என்று தோன்றியது! சமீபத்தில் பார்த்த "கல்லூரி" படத்தில் வருவது போல என்னுடைய கல்லூரி காலத்தில் ஜொள்ளிக் கொண்டு அலைந்தது பற்றி சொல்லலாம்.

பள்ளியில் படிக்கும் போது ஜெயந்தி என்று ஒரு பெண் கூடப் படித்தது. படிப்பில் ஒன்றும் பெரிய சுட்டி இல்லை (அதாவது அந்தப் பெண், நான் எப்போதுமே சுட்டிதான் ஹா ஹா ஹா) என்றாலும், பார்க்க நல்ல களையாக இருந்த ஒரு முகம். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு வந்த பின்னும் வீடு ஒரே ஏரியா என்பதால் கொஞ்ச நாள் டாவடித்துவிட்டு விட்டுவிட்டேன்.

பிறகு, நண்பன் சாலைமணி மாதவன் (நண்பா, எங்கேயடா இருக்கிறாய்?) தயவால் மதுரையில் இருக்கும் கூடலழகர் பெருமாள் கோவிலை ஒரு மார்கழி மாதத்தில் சுற்ற ஆரம்பித்தோம் (பக்தி மார்க்கதில்தான்). ஆனால், ஆரம்பித்த இரண்டாவது நாள்தான் நண்பன் மாதவனின் நோக்கம் புரிந்தது. PKS என்று செல்லப் பெயர் வைத்த Perumal Koil Sisters என்ற இரண்டு மிக அழகான பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடத்தான் இந்த பக்தி என்று தெரிந்தது.

அதில் ஒரு பெண்ணின் பெயர் லக்ஷ்மி காந்தம்(என்ன பொருத்தமான பெயர்?). உங்களில் எவ்வளவு பேர் சௌராஷ்ட்ரா பெண்களைப் பார்த்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் பிறந்து, வளர்ந்த மதுரையில் ஏராளமான சௌராஷ்ட்ரா மக்கள் இருக்கிறார்கள். இந்த பெண்கள் முக்கால்வாசி ஒரு வித்யாசமான மஞ்சள் நிறத்தில் இருப்பார்கள் (சிவப்பு கிடையாது, வெள்ளை கிடையாது, மஞ்சள்!) பெரும்பாலும் பார்க்க நல்ல அழகாகவே இருப்பார்கள். ஆனால் பேசுவதற்கு ரொம்பவே பிகு பண்ணுவார்கள் (அப்போதைய நிலவரம்).

இந்த அழகி தரிசனம் கிடைக்க தினசரி பெருமாள் கோயில் விஜயம். வீட்டில் பெற்றோர்கள் ஆஹா, நம் மகனுக்கு என்ன பக்தி என்று புல்லரித்துப் போனார்கள். ஆனால், பெருமாளுக்கே நானும், நண்பனும் செய்த கேப்மாரித்தனம் பிடிக்கவில்லை என நினைக்கிறேன். ஒரு நாள் கோயிலை விட்டு வெளியே வரும்போது ஆஜானுபாகன் ஒருவன் (சினிமாவில் வருவது போல), எங்களுடைய கனவுக் கன்னியை ஸ்கூட்டரில் கவர்ந்து போய்விட்டான்.

அதற்குப் பிறகு ஒன்றும் சொல்கிற மாதிரி ஜொள்ள முடியவில்லை. இன்ப (?) அதிர்ச்சியாக ஒரு நாள் நண்பன் ரவியின் வீட்டில் அதே அழகியை (லக்ஷ்மி காந்தம்) பார்த்தேன். ரவியின் தங்கையின் (ஐயா, இப்போது என்னுடைய மனைவி) கல்லூரித் தோழி அவள் என்பதும், என் கண் முன்னே அவளைக் கவர்ந்து சென்றவன் மூர்த்தி எனும் ஒரு கராத்தே வீரன் என்று தெரிந்தவுடன் ஆகே, பீச்சே (ஹிந்தி தெரிந்தால் புரியும்)என்று மூடிக்கொண்டு ஜூட் விட்டேன்.

பிறகு PG சேர்ந்த பிறகு, நானும் என நண்பன் பாபு என்கிற பாலகிருஷ்ணனும் என வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருப்போம். விசுக், விசுக் என்று அந்த சமயம் பார்த்து ஒரு பெண் (பெயர் தெரியாது, அதன் புஸு, புஸு தலைமுடியை வைத்து நாங்கள் வைத்த பெயர், குருவிக்கூடு-பாபு, ஞாபகம் இருக்கா?) அந்த வழியே செல்லும். எங்களை ஓரக்கண்ணால் பார்த்தால் ஒரே குஷிதான். இதை எப்படியோ கவனித்து விட்ட என தந்தை (எப்போதுமே ஒரு ஜென்டில்மன்), என் காதுபட என் அம்மாவிடம், "வர, வர பெண்கள் எல்லாம் ரொம்ப மோசம், காலாகாலத்தில் வீடு மாற்றவேண்டும்" என்றார். அவரே, பின்னாளில் என்னுடைய காதலுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சை கொடி காட்டி, மறுபடியும் தானொரு ஜென்டில்மன் என்பதை நிரூபித்தார்.

அதன் பின் ரொம்பச் சமர்த்தாக நான் உண்டு, என் படிப்பு உண்டு என மாறிவிட்டேன்.

ஹலோ, சரியா கேக்கலை, என்ன சொல்றீங்க? என்னது, கல்யாணத்துக்கு அப்புறம் ஜொள் விட்ட விஷயமா? ரொம்ப லொள்ளுதான், ஏன்யா, குடும்பத்தில கொழப்பம் பண்றீங்க!

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்