Skip to main content

மும்பை கலவரம்

ராஜ் தாக்ரே ஒரு LKG அரசியல்வாதி. இவர் தேவையில்லாமல் ஒரு கூட்டத்தில் பேசும்போது அமிதாப் பச்சனை வம்புக்கு இழுத்திருக்கிறார். என்னதான் மும்பையிலேயே இவ்வளவு வருடம் இருந்துகொண்டு கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அமிதாப் மும்பைக்கு எதுவும் செய்யவில்லை என்றும், முழுக்க முழுக்க உ.பி மாநிலத்துக்குதான் எல்லாம் செய்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். பதிலுக்கு அமிதாப் எதுவும் சொல்லாத நிலையில் அவருடைய மனைவி ஜெயா பச்சன் "எங்களுக்கு பால் மற்றும் உதவ் தாக்ரே ஆகியோரைத்தான் தெரியும், இது யார் ராஜ் தாக்ரே?" என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டார்.

உடனே, ராஜ் தாக்ரேயின் குண்டர்கள் மும்பை எங்கும் கலவரம் செய்து கண்ணில் பட்ட மற்ற மாநிலத்தவர்களை உதைத்து, கடைகளை நொறுக்கி, தீவைத்து ஏக கலாட்ட செய்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் எல்லா செய்தி ஊடகங்களும் (channels) போட்டி போட்டுக்கொண்டு மும்பையில் பிற மாநிலத்தவர் இருக்கலாமா, வேண்டாமா? என்று கேனத்தனமாக sms contests நடத்தி கல்லா கட்டின. இதைவிட ஒரு கடைந்தெடுத்த அயோக்யத்தனம், முட்டாள்தனம் இருக்க முடியாது. மும்பை என்ன பாகிஸ்தானா?

இதில் ஒரு ராஜ் தாக்ரேயின் ஆதரவாளர் NDTV யில் கூறினார்: "வெளி மாநிலங்களில் இருக்கும் மகாராஷ்ட்ரியர்களுக்கு அவரவரைக் காத்துக்கொள்ள முடியும். ரஜினி எங்கள் மாநிலத்தவர், ஆனால் பாருங்கள் தமிழ் நாட்டில் போய் தமிழ் கற்றுக் கொண்டுதான் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார், ஆனால் இங்கிருக்கும் எந்த தமிழனும் மராத்தி கற்றுக் கொள்வதில்லை" என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை!

கடவுளே, இந்த அரசியல்வாதி (வியாதி)களிடமிருந்து எங்களைக் காப்பாற்று!

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...