Skip to main content

NDTV INDIA AWARDS 2007




26/01 இரவு என்டிடீவியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவற்றின் சில சுவாரசியமான பதிவுகள்:
ரஜினிகாந்த் பிரமாதமான நடிகர் இல்லை என்று நான் சொன்னால் எனக்கு கை, கால் உடைந்துவிடும். எனவே, அவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்லாமல் அவருடைய பேச்சுத் திறமையைப்பற்றி பேசலாம்.

அதற்கு முன் ஷாருக்கான் சிறப்பு (ஸ்பெஷல்) NDTV Entertainer of 2007 awardஐப் பெற வந்த போது, பேட்டி கண்ட பெண் அவரிடம் நீங்கள் ஏன் அரசியலில் குதிக்கக் கூடாது என்று கேட்டதற்கு அதில் மாட்டிக்கொள்ளாமல், "அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும் நல்ல திறமைசாலிகள், புத்திசாலிகள் என்பதால் எனக்கு அரசியலில் இடமில்லை, என்ன, இந்த அரசியல்வாதிகளை விட நான் சற்று அழகாக இருப்பதால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்," என்று நன்றாக சமாளித்தார். அவரிடம் யாராவது கேள்வி கேட்கலாம் என்ற போது, ராகுல் காந்தி, "அரசியல்வாதிகளுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்கள்," என்றதற்கு, ஷாருக் ரொம்ப சுருக்கமாக, "be honest, as realistically as possible, " என்று சொல்லி கைதட்டல்களுடன் அமர்ந்தார்.

பிறகு நம் சூப்பர் ஸ்டாரை அழைத்து பிரதமர் மன்மோகன் சிங் கையால் "NDTV Best Entertainer 2007 award கொடுக்க, அத்தனை suit, kurtha, shervaani களுக்கு நடுவே, மிக simple ஆக ஒரு ஜிப்பாவுடன் மேடையேறிய ரஜினி, பிரதமர் கையால் விருது வாங்குவதை மிகப் பெருமையாக நினைப்பதாகச் சொல்லிவிட்டு, பிரதமரை ஒரு அரசியல் ஞானி (political saint)என்று புகழ்ந்தார். ரஜினியை பேட்டி கண்டவர், நீங்கள் சென்னை நகரைவிட்டு வெளியே கிளம்பினாலே ஊர் ஸ்தம்பித்து விடுகிறதாமே என்று கேட்டதற்கு அதெல்லாம் மீடியாகாரர்கள் கிளப்பும் புரளி என்றார். பிறகு, நீங்கள்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராமே என்று கேட்டதற்கு உடனே அதெல்லாம் பொய் என்றார், நிருபர் விடாமல் ஏன் நிதி அமைச்சர் சிதம்பரம் இங்கு இருப்பதால் இந்த பதிலா என்றதற்கு சிரித்து மழுப்பிவிட்டார்.

ரஜினியிடம் யாரவது கேள்வி கேட்கலாம் என்றவுடன் ஹிந்தி இயக்குனர் கரன் ஜோஹர எழுந்து, "Is there anything that Rajini Can't do?" என்று கேட்டதற்கு ரஜினி சிரிப்புடன் நின்று விட, ஜோஹர் விடாமல், "உங்களுக்குமிகவும் பிடித்த ஹிந்தி நடிகர் யார்?" என்ற கேள்விக்கு தயங்காமல் "அமிதாப் பச்சன்" என்றார். நிருபர் உடனே ஆமாம் நீங்கள் பாட்ஷா என்றால் அவர் ஷாஇன்ஷா என்றார், பிறகு அவரே தொடர்ந்து இங்கு மேலும் ஒரு பாட்ஷா இருக்கிரார் என்றதற்கு ரஜினி உடனே ஷாருக்கைக் காட்டி அதோ அவர்தான் என்றார்.

உடனே எழுந்த ஷாருக் தான் ஷாஇன்ஷா ஆவதற்கு என்ன செய்யவேண்டுமெனக் கேட்க, ரஜினி நீங்கள் கூடிய விரைவில் ஆகிவிடுவீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொல்ல ஏக கலாட்டா.

தமிழ்நாட்டிலிருந்து விஸ்வநாதன் ஆனந்த் (பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் பெர்சன்) தவிர , ஏ ஆர் ரஹ்மான், ரஜினிகாந்த் என்று விருதுகள் கொடுத்து இந்தியாவில் சினிமா என்றாலே bollywood தான் என்ற மாயையை உடைத்த NDTVக்கு நன்றி! .

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்