Skip to main content

NDTV INDIA AWARDS 2007




26/01 இரவு என்டிடீவியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவற்றின் சில சுவாரசியமான பதிவுகள்:
ரஜினிகாந்த் பிரமாதமான நடிகர் இல்லை என்று நான் சொன்னால் எனக்கு கை, கால் உடைந்துவிடும். எனவே, அவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்லாமல் அவருடைய பேச்சுத் திறமையைப்பற்றி பேசலாம்.

அதற்கு முன் ஷாருக்கான் சிறப்பு (ஸ்பெஷல்) NDTV Entertainer of 2007 awardஐப் பெற வந்த போது, பேட்டி கண்ட பெண் அவரிடம் நீங்கள் ஏன் அரசியலில் குதிக்கக் கூடாது என்று கேட்டதற்கு அதில் மாட்டிக்கொள்ளாமல், "அரசியலில் இருப்பவர்கள் எல்லோரும் நல்ல திறமைசாலிகள், புத்திசாலிகள் என்பதால் எனக்கு அரசியலில் இடமில்லை, என்ன, இந்த அரசியல்வாதிகளை விட நான் சற்று அழகாக இருப்பதால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்," என்று நன்றாக சமாளித்தார். அவரிடம் யாராவது கேள்வி கேட்கலாம் என்ற போது, ராகுல் காந்தி, "அரசியல்வாதிகளுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்கள்," என்றதற்கு, ஷாருக் ரொம்ப சுருக்கமாக, "be honest, as realistically as possible, " என்று சொல்லி கைதட்டல்களுடன் அமர்ந்தார்.

பிறகு நம் சூப்பர் ஸ்டாரை அழைத்து பிரதமர் மன்மோகன் சிங் கையால் "NDTV Best Entertainer 2007 award கொடுக்க, அத்தனை suit, kurtha, shervaani களுக்கு நடுவே, மிக simple ஆக ஒரு ஜிப்பாவுடன் மேடையேறிய ரஜினி, பிரதமர் கையால் விருது வாங்குவதை மிகப் பெருமையாக நினைப்பதாகச் சொல்லிவிட்டு, பிரதமரை ஒரு அரசியல் ஞானி (political saint)என்று புகழ்ந்தார். ரஜினியை பேட்டி கண்டவர், நீங்கள் சென்னை நகரைவிட்டு வெளியே கிளம்பினாலே ஊர் ஸ்தம்பித்து விடுகிறதாமே என்று கேட்டதற்கு அதெல்லாம் மீடியாகாரர்கள் கிளப்பும் புரளி என்றார். பிறகு, நீங்கள்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராமே என்று கேட்டதற்கு உடனே அதெல்லாம் பொய் என்றார், நிருபர் விடாமல் ஏன் நிதி அமைச்சர் சிதம்பரம் இங்கு இருப்பதால் இந்த பதிலா என்றதற்கு சிரித்து மழுப்பிவிட்டார்.

ரஜினியிடம் யாரவது கேள்வி கேட்கலாம் என்றவுடன் ஹிந்தி இயக்குனர் கரன் ஜோஹர எழுந்து, "Is there anything that Rajini Can't do?" என்று கேட்டதற்கு ரஜினி சிரிப்புடன் நின்று விட, ஜோஹர் விடாமல், "உங்களுக்குமிகவும் பிடித்த ஹிந்தி நடிகர் யார்?" என்ற கேள்விக்கு தயங்காமல் "அமிதாப் பச்சன்" என்றார். நிருபர் உடனே ஆமாம் நீங்கள் பாட்ஷா என்றால் அவர் ஷாஇன்ஷா என்றார், பிறகு அவரே தொடர்ந்து இங்கு மேலும் ஒரு பாட்ஷா இருக்கிரார் என்றதற்கு ரஜினி உடனே ஷாருக்கைக் காட்டி அதோ அவர்தான் என்றார்.

உடனே எழுந்த ஷாருக் தான் ஷாஇன்ஷா ஆவதற்கு என்ன செய்யவேண்டுமெனக் கேட்க, ரஜினி நீங்கள் கூடிய விரைவில் ஆகிவிடுவீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொல்ல ஏக கலாட்டா.

தமிழ்நாட்டிலிருந்து விஸ்வநாதன் ஆனந்த் (பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் பெர்சன்) தவிர , ஏ ஆர் ரஹ்மான், ரஜினிகாந்த் என்று விருதுகள் கொடுத்து இந்தியாவில் சினிமா என்றாலே bollywood தான் என்ற மாயையை உடைத்த NDTVக்கு நன்றி! .

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...