Skip to main content

பேறும், புகழும் பெற வேணுமா? முதலில் அதற்கு நீங்கள் சாக வேணும்!

என்ன கொடுமை சார், இது? என்று கேட்பவர்களுக்கு பதில் இன்று வந்த Times Online (http://www.timesonline.co.uk/tol/news/uk/article3241490.ece) இணைய தளத்தில் (website) இருக்கிறது.

இங்கிலாந்தில் தீடீரென ஏழு பெண்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். காவல் துறை புலனாய்வு செய்யும் போது ஒரு அதிர்ச்சியான, பைத்தியகாரத்தனமான, விஷயம் வெளிவந்துள்ளது. உயிரோடு இருக்கும்போது யாருக்குமே தெரியாமல் இருக்கும் சிலர் இறந்தவுடன் மிகப் பிரபலமாக (posthumous celebrity) ஆகிவிடுவதாக ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டு இந்த விபரீத விளையாட்டை ஆரம்பித்திருக்கிறது.

South Wales சைச் சேர்ந்த நடாஷா ராண்டல் என்ற 17 வயதுப் பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்தவுடன் அவளுடைய நண்பர்கள் அவள் நினைவாக ஒரு memorial website ஒன்றை ஆரம்பித்து அதில் அவளுடைய புகைப்படங்களையும், நினைவுகளையும் பதிந்து அவளை மிகவும் புகழ்ந்து செய்திகளை வெளியிட, மிக குறுகிய நேரத்தில் 3000 க்கும் அதிகமானோர் அந்த இணைய தளத்தை பர்வையிட்டுள்ளார்கள். இந்த செய்தியை வேறு ஒரு இணைய தளம் வெளியிட்டு, ஆகா, புகழ் பெற மிக இது ஒரு எளிய வழி என்று ஒரு புரளியை வெளியிட, அதுவே அந்த 7 பெண்கள் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகோலாகிவிட்டதாக காவல் துறை சந்தேக்கிறது.

இறந்த அந்த 7 பேருமே நடாஷாவுக்கு தெரிந்தவர்கள் என்பதும், அவர்கள் எல்லோருமே ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் காவல் துறையின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

ஹையோ, ஹையோ! கடவுளே காப்பாத்து!

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.