Skip to main content

பேறும், புகழும் பெற வேணுமா? முதலில் அதற்கு நீங்கள் சாக வேணும்!

என்ன கொடுமை சார், இது? என்று கேட்பவர்களுக்கு பதில் இன்று வந்த Times Online (http://www.timesonline.co.uk/tol/news/uk/article3241490.ece) இணைய தளத்தில் (website) இருக்கிறது.

இங்கிலாந்தில் தீடீரென ஏழு பெண்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். காவல் துறை புலனாய்வு செய்யும் போது ஒரு அதிர்ச்சியான, பைத்தியகாரத்தனமான, விஷயம் வெளிவந்துள்ளது. உயிரோடு இருக்கும்போது யாருக்குமே தெரியாமல் இருக்கும் சிலர் இறந்தவுடன் மிகப் பிரபலமாக (posthumous celebrity) ஆகிவிடுவதாக ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டு இந்த விபரீத விளையாட்டை ஆரம்பித்திருக்கிறது.

South Wales சைச் சேர்ந்த நடாஷா ராண்டல் என்ற 17 வயதுப் பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்தவுடன் அவளுடைய நண்பர்கள் அவள் நினைவாக ஒரு memorial website ஒன்றை ஆரம்பித்து அதில் அவளுடைய புகைப்படங்களையும், நினைவுகளையும் பதிந்து அவளை மிகவும் புகழ்ந்து செய்திகளை வெளியிட, மிக குறுகிய நேரத்தில் 3000 க்கும் அதிகமானோர் அந்த இணைய தளத்தை பர்வையிட்டுள்ளார்கள். இந்த செய்தியை வேறு ஒரு இணைய தளம் வெளியிட்டு, ஆகா, புகழ் பெற மிக இது ஒரு எளிய வழி என்று ஒரு புரளியை வெளியிட, அதுவே அந்த 7 பெண்கள் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகோலாகிவிட்டதாக காவல் துறை சந்தேக்கிறது.

இறந்த அந்த 7 பேருமே நடாஷாவுக்கு தெரிந்தவர்கள் என்பதும், அவர்கள் எல்லோருமே ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் காவல் துறையின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

ஹையோ, ஹையோ! கடவுளே காப்பாத்து!

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்