Skip to main content

மறக்க முடியாத சந்திப்பு


























என்னுடைய வேண்டுகோளை ஏற்று குடும்பத்துடன் இன்று (30/12/07) Hotel Breeze க்கு வருகை தந்த நம் "ரம்யா" நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றி.
ஷங்கர் வர முடியாத காரணத்தால் என் சிங்கப்பூர் பயணத்தின் போது ரவி மற்றும் ஷங்கர் குடும்பத்துடன் ஒரு மாலைப் பொழுது "ராஜ்" என்ற பெங்காலி ரெஸ்டாரன்ட்டில் 24 Dec அன்று நன்றாக கழிந்தது.

பிறகு இன்று Breeze Hotel களைகட்டியது. குமார், செழியன், பாண்டியன் மற்றும் முருகன் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனது வருத்தம் என்றாலும், மற்ற அனைவரும் வந்து சேர்ந்தது ஒரு மிக மகிழ்ச்சியான விஷயம்.

நம்முடைய மனைவியர் நிறைய பேர் ஒருவருடன் ஒருவர் அறிமுகமே இல்லாமல் இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் உடனே பழக ஆரம்பித்தது மிகவும் ஒரு நல்ல விஷயம். குழந்தைகளும் அப்படியே.

ஸ்ரீதர் நேற்று என்னுடன் அலைபேசி மூலம் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி மும்பையில் இருப்பதாகவும் முடிந்தால் கலந்து கொள்வதாக சொல்லி இருந்ததால் என்னுடைய எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. பிறகு ஒரு sweet surprise ஆக அவன் குடும்பத்துடன் கலந்து கொண்டான்.

குஞ்சிதபாதம், Berger ரவி, சேகர், சாயீ, நரசிம்மன், ராஜ்குமார் ஆகிய எல்லோருமே முழு மனதுடன், குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் "Highlights":
-நண்பன் ராஜ்குமாரின் இரண்டாவது பெண் வரிணி ( 2ம் வகுப்பு) அமர்க்களமாக பாட்டுக்கு மேல் பாட்டு பாடியது.
-சேகரின் மகன் சாயீ சரண் கிடுகிடுவென போர்டில் படம் வரைந்தது.
-ராஜ்குமார் மைக் பிடித்து "உறவுகள் தொடர்கதை" என்ற அருமையான K J யேசுதாஸ் பாடலை (படம்-அவள் அப்படித்தான்) நன்றாக பாடியது.
-கிட்டத்தட்ட எல்லாருடைய பெண் வாரிசுகளும், ரவியின் முதல் மகன் ராகவும் சரளமாக பாடியது.

இந்த சந்திப்பில் சிங்கப்பூர் ரவி, ஷங்கர், குமார், செழியன், முருகன், பாண்டியன் மற்றும் வாசு ஆகியோரை மிக மிக miss செய்தோம்.

எல்லோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். 2008 ம் ஆண்டு வளம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

Comments

SethuMandapam said…
சுமுகச் சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக
தூமகேதுர் கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந:
வக்கரதுண்ட: சூர்பகர்னோ ஹேரம்ப ச்கந்தபூர்வஜ:

These are the sixteen Ganapathi namavali which if recited every day shall remove us from all hurdles in life.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...