Skip to main content

ஐஸ் ஹோட்டல் அற்புதம்

நாமெல்லாம் அவரவர் வசதிக்கும்/கம்பெனி பட்ஜெட்டுக்கும் ஏற்றார்போல ஹோட்டல்களில் தங்குகிறோம். ஷங்கர் போன்ற globe trotting ஆசாமிகள் 5 Star ஹோட்டல்களை நாடும்போது, நம்மில் பலர் ஒரு நல்ல, டீசண்ட் ஆன ஹோட்டலில் தங்க விழைகிறோம். Business Travellers மற்றும் Tourists ஆகியோரை கவரும் விதமாக இப்போது விதவிதமான ஹோட்டல்களை காண முடிகிறது. Apartment Hotels, Boutique Hotels என்று விளம்பரப்படுத்தி பணம் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் சிங்கப்பூரில் ஷங்கருடன் பேசியபோது Chicagoவில் உள்ள ஒரு விஞ்ஞானமயமான ஒரு ஹோட்டல் பற்றி சிலாகித்து சொன்னான். ஆள் உதவி ஏதுமின்றி check-in செய்வதிலிருந்து எல்லாமே computerமயம் (computerஐ கணினி என்று சொல்ல ஏனோ கை வரவில்லை. எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல எல்லா வார்த்தைகளையும் தமிழ்படுத்தும்போது சில அபத்தங்களை தவிர்க்கலாம் என எண்ணுகிறேன். Biology subjectஇல் Protoplasm என்பதை "உயிரணு பாயசம்" என்று பாடப் புத்தகங்கள் குறிப்பிடும்போது சற்று எரிச்சலாகத்தான் இருக்கிறது) என்று சொன்னபோது ஆஹா என்று சொல்லத் தோன்றியது. இப்போது ஒரு ஐஸ் ஹோட்டல் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம், அங்கிருந்து சுமார் 1350 கீமி தொலைவில் இருக்கிறது Kiruna நகரம். அங்கிருந்து மிக அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமம்தான் Jukkasjärvi (ஜுக்காசார்வி). இங்குதான் இந்த அதிசய ஐஸ் ஹோட்டல் உள்ளது. முழுக்க முழுக்க ஐஸால் செய்யப்படும் ஹோட்டல் இருக்கிறது. அதென்ன "செய்யப்படும்" என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு வருடமும் winter இல் கட்டப்பட்டு பிறகு summer இல் கரைந்து ஓடிவிடுகிறது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஒவ்வொரு வருடமும் இந்த அதிசயம் கட்டப்படுகிறது! என்ன இந்த ஐஸ் ஹோட்டல் இருக்கும் கிராமத்தில் இருந்து Artic Circle 200 கீமீ தூரம்தான்.

1990 ஆம் வருடத்தில்தான் இந்த ஹோட்டல் முதலில் கட்டப்பட்டது.அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் வேறுவேறு designகளில் கட்டப்படும் இது ஒரு இன்ஜினியரிங் அற்புதம்.Torne River எனும் ஒரு ஜீவ நதி பனிக்காலத்தில் உறைந்து போய்விடும் பொது இந்த ஐஸ் ஹோட்டல் சடுதியில் கட்டப்படுகிறது. பிரத்யேகமாக ஒவ்வொன்றாக மெனக்கெட்டு ஒரு நவீன ஹோட்டலின் எல்லா வசதிகளையும் ஐஸில் கொண்டு வந்து பார்ப்போரை அசர வைக்கிறார்கள்.

கடந்த பதினேழு வருடங்களாக சலிக்காமல் புதிதுபுதிதாக இந்த ஐஸ் ஹோட்டல் கட்டப்படுகிறது. Winter வரும்போது கட்டப்படும் இந்த ஹோட்டல் மறுபடியும் summer இல் உருகி Torne River இல் ஐக்கியமாகி விடும்போது மிஞ்சுவது அதைப்பற்றிய நினைவுகளும் அதனுடைய புகைப்படங்களும்தான்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...