Skip to main content

கண்கவர் சுற்றுலா தலம் கவி (Gavi)


கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு கண்கவர் இடங்களில் அதிகம் அறியப்படாத இடம், கவி. பத்தனம்திட்டா மாவட்டத்தில், தேக்கடியிலிருந்து சுமார் 40 கி.மி. தொலைவில் உள்ளது இந்த அழகான இடம். 


நிறையப்பேருக்கு இன்னும் இதைப் பற்றி அதிகம் தெரியாததால் இந்த இடம் இன்னும் அதிகம் மாசுபடாமல் இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கவிக்கு செல்ல வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவு சீட்டு பெற்றே செல்லவேண்டும். 


தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயம் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். கவி இதனுள்ளே இருப்பதால் அதன் தனித்துவமான அழகு குன்றாமல் சிறப்பாக இருக்கிறது. கவிக்கு ஒரு முறை சென்றால் ஸ்விட்சர்லாந்து அல்லது குறைந்த பட்சம் காஷ்மீர் சென்ற அனுபவத்தைப் பெறலாம்.


கவி பசுமை மாறா காடுகள் (evergreen forests ) மத்தியில் உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, மான் ஆகிய பல வனவிலங்குகள் உள்ளன. கவிக்கு செல்லும் பாதை வளைந்து நெளிந்து தேனீர் எஸ்டேட்கள் வழியே செல்லும்போது, வழியில் சின்ன, சின்ன அருவிகள், வாய்க்கால்கள் , ஓடைகள் ஆகியவை குறிக்கிடுகின்றன.  அதிக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தால் ஒரு இடம் எவ்வளவு இயற்கை செழிப்புடன் இருக்கும் என்பதற்கு கவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 


பம்பா தாவரவியல் பூங்கா இங்குள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3400 அடிகள் மேலே உள்ள கவியிலிருந்து சபரிமலை மிக அருகே உள்ளது.


பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் இங்கு செல்ல ஏற்ற சூழல் உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை பெய்வதால் இரவு நேரத்தில் 10 டிகிரி வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. எனவே குளிர் அதிகமாகவே இருக்கும். நல்ல வேளை இங்கு தங்குவதற்கு இடம் இல்லை. இதை இப்படியே கேரள அரசு வைத்திருந்தால் நல்லது.

புகைப்படங்கள் நன்றி: மை கேரளா ஹோட்டல்ஸ் வலை தளம் 


Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...