Skip to main content

ஹானா-அதிரடி கலந்த அழகான ஆக் ஷன் படம்



 ஹாலிவுட் ஆக் ஷன் படங்கள் பொதுவாக கரம் மசாலா கலந்த சுத்தமான அடிதடி படங்களாகவே இருக்கும். எப்போதாவது ஒருமுறைதான் ஹானா போன்ற அழகான ஆக் ஷன் படங்கள் வெளிவரும்.

பனிபடர்ந்த காட்டின் நடுவே மானை வேட்டை ஆட ஹானா (Saorise Ronan) பொறுமையாக வில் மற்றும் அம்புடன் காத்திருக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். கிட்டத்தட்ட ஒரு மாடு சைசில் வரும் அந்த மானை அம்பு எய்தி கொள்கிறாள் ஹானா (. அம்புடன் சிறிது தூரம் ஓடிவிட்டு கீழே விழும் அந்த மானை நெருங்கி, "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அதைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா. யாருமே இல்லாத அந்த பனிபிரதேசத்தில் (வடக்கு பின்லாந்த்) தன்னுடைய தந்தையால் (Eric Bana) ஒரு முக்கிய குறிக்கோளுடன் வளர்க்கப்படுகிறாள். தந்தை அமெரிக்க உளவு நிறுவனமான CIA யில் பணிபுரியும்போது சில துரோகிகளால் பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு பின் தப்பிவிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹானாவின் தாய் கொல்லப்டுகிறாள்.

ஹானாவின் தந்தை ஹானாவுடன் ஆளரவமில்லாத பனிபிரதேசத்தில் வாழ்கிறார். ஹானா தன்னை எல்லாவிதத்திலும் தயார் செய்துகொண்டவுடன், தன்னை ஏடாகூடமாக சிக்கவைத்த அந்த CIA ஏஜெண்டுக்கு செய்தி அனுப்பச் சொல்கிறார் அவள் தந்தை. CIA  கைக்கூலிகள் அந்த இடத்தை முற்றுகை இடும்முன் ஹானாவை அங்கு தனியாக விட்டுவிட்டு அவள் தந்தை தப்பிக்க, தந்தை-மகள் இருவரும் ஏற்கனவே போட்ட திட்டப்படி, ஹானா விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். வெள்ளை வெளேரென, குச்சி,குச்சியான கைகால்களுடன் இருக்கும் ஹானாவை ரொம்ப சாதரணமாக நினைத்தாலும், அவளைத் தப்புவிக்க அவள் தந்தை முயற்சிக்கலாம் என்று ஒரு பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கிறாள் ஹானாவின் வாழ்வை சீர்குலைத்த மரிஸா (Cate Blanchett). அந்த சிறையில் இருந்து ஹானா தப்பிக்கும் தடதடக்கும் அந்த 20 நிமிடங்கள் நம்மை ஆச்சரியப் படவைக்கும் ஹை-லைட்.

ஆள், படை, அம்பு என சகலவிதமான பாதுகாப்புடன் இருக்கும் மரிஸாவை ஹானா கடைசியில் கொல்லும் போது, படத்தின் ஆரம்பத்தில் நமக்கு ஏற்படும் படபடப்பு அடங்குகிறது. அம்பால் காட்டு விலங்கைக் கொல்வது போல, மரிஸா மேல் அம்பு எய்துவிட்டு, கீழே கிடைக்கும் அவள் அருகே வந்து, " "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அவளைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா.

அட்டகாமான ஒளிப்பதிவு, அதிர வைக்கும் பின்னணி இசை (Chemical Brothers), பரபரப்பை குறைவில்லாமல் கொண்டு செல்லும் எடிட்டிங், மெய்மறக்க வைக்கும் லொகேஷன்கள், புதிய முகமாக இருந்தாலும்  ஹானாவாக அலட்டாமல் நடிக்கும் சாரிஸ் ரோனன். ஹானா ஒரு வித்தியாசமான த்ரில்லர்தான்.



Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...