Skip to main content

இந்திய அணியிடம் மிதி வாங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதியின் கேவலமான பேட்டி

கிரிக்கெட் பற்றி நம்மில் பெரும்பாலோருக்கு அதிகம் தெரியாது என்றாலும் உலக தீவிரவாதிகளின் மையம் பாகிஸ்தான் என்பது நம்மூரில் உள்ள நாய்களுக்குக் கூட நன்றாக தெரியும். தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது முதல், அவர்களைச் சிறுவயது முதல் தீவிரவாத கொலைப் பயிற்சிகளில் ஈடுபடுத்தி உலகெங்கும் அப்பாவி மக்களைக் கொல்லத் தூண்டுவதுவரை பாகிஸ்தானின் கைவரிசை எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

இந்நிலையில், இந்திய அணியிடம் சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை போட்டியில் மரண அடி வாங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன், அவர்கள் அணி அடைந்த கேவலமான தோல்வியை மறைக்க தேவையில்லாமல் ஒரு பேட்டியில் உளறி இருக்கிறார்: "என்னுடைய கருத்துப்படி நான் உண்மையை சொல்லவேண்டும்; அவர்கள் (இந்திய அணி) எப்போதுமே முஸ்லிம்களைப் போலவோ, பாகிஸ்தானியர்களைப் போலவோ பரந்த மனது உடையவர்கள் அல்ல. அல்லா நமக்கு பரந்த மனதைத் தந்திருக்கிறார்," என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இந்தத் தறுதலை அப்ரிதிக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன: உலகில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடு நம் இந்தியா. எந்த முஸ்லிம் நாடுகளிலும் சிறுபான்மை மதங்களுக்கு சிறப்பு சலுகைகள் இல்லை. நம் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் முஸ்லிம் மக்களுக்கு இடஒதுக்கீடு முதல் பல்வேறுபட்ட சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் பரந்த மனம் இல்லாமல் செய்ய முடியாது. 

பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதோர் ஒரு சிறு பதவி கூட வகிக்க முடியாது. ஜாகிர் ஹுசைன் முதல் அப்துல் கலாம் வரை நிறைய முஸ்லிம் மதத்தினர் நம் இந்தியாவில் ஜனாதிபதி பதவியில் இருந்து பல்வேறுவிதமான பொறுப்பான பதவிகளில் இருந்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு இதுவரை முஸ்லிம் மதத்தினரைத் தவிர வேறு யாரும் கேப்டனாக இருந்ததில்லை, இனிமேலும் முடியாது. நம் அணியில் அசாருதின் போன்றவர்கள் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். இப்போதுள்ள அணியில் யூசுப் பத்தான், ஜாகிர் கான் ஆகியோர் இடம்பெற்று திறம்பட விளையாடி வருகிறார்கள்.

முஸ்லிம்களை இந்தியாவின் ஒரு அங்கமாக மட்டுமே மற்ற மதத்தினர் எண்ணி ஒரு இணக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும்போது அப்ரிதியின் கேவலமான புத்தி இந்த பேட்டியின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

முக்கியமாக, அப்ரிதி தேவையில்லாமல் இங்கே மதத்தை இழுத்திருக்கிறார். இதைப் போன்ற மதவெறி பிடித்த பிறவிகளை இனிமேல் இந்தியாவில் விளையாட அனுமதித்தால் அது முட்டாள்தனம்.


Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...