Skip to main content

கமலின் சமீபத்திய உளறல்

சமீப காலமாக தொடர்ச்சியாக (back to back) கொடுக்கும் எல்லா பேட்டிகளிலும் கமலின் உளறல் அதிகமாக ஆகியிருக்கிறது. என்னதான் பேசுகிறோம் என்று வகை தொகை தெரியாமல் கமலின் உளறல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி ஆகியோருக்குப் பிறகு அந்த இடம் காலியாக இருக்கிறது அதை நிரப்பும் தகுதி தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு இருக்கிறது என்பது கமலின் லேட்டஸ்ட் அபத்தமான உளறல்.

வயதாகி விட்டதால், இந்தியாவே பெருமைப்படும் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியிருக்கும் ஏ. ஆர். ரஹ்மானின் சாதனைகள் இந்தாளுக்குத் தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே சொல்கிறாரா என்று தெரியவில்லை. சமீப காலமாக ஹிட்டுக்கு மேல் ஹிட்டாக கொடுத்துக் கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, ஜீ. வி. பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கமல் கண்களுக்குத் தெரியவில்லையா.

இதைப் பற்றி பெரும்பாலான இசை அமைப்பாளர்கள் கருத்து சொல்ல மறுத்திருப்பது அவர்களுக்கு இருக்கு மெச்சுரிட்டி லெவலை காட்டுகிறது. கமலுக்கு ஆதரவாக சிலர் அவர் தேவிஸ்ரீ பிரசாத் பெரிய அளவில் வரவேண்டும் என்று அப்படி சொல்லியிருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஓகே, கமல் எப்படி இதை சொல்லிருக்க வேண்டுமென்றால் தேவிஸ்ரீ பிரசாத் இளையராஜா மற்றும் எம்.எஸ்.வி லெவலுக்கு வரவேண்டும், அதற்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையைப் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவருடைய சமீபத்திய பாடல்கள் எல்லாமே நல்ல ஹிட்டாகி உள்ளன. சிங்கம் படப் பாடல்கள் போல மன்மதன் அம்பு பாடல்களும் பெரிய ஹிட்டாகி இருக்கலாம், ஆனால் கமல் அதிலும் தன்னுடைய மூக்கை நுழைத்தால் இந்தப் படத்தின் எந்த பாடலுமே பெரிய அளவில் ரீச்சாகாமல் போய்விட்டன. இந்த லட்சணத்தில் இந்த மாதிரி அபத்தமான கமெண்ட் தேவையா? 

Comments

mouravi said…
கமலை தெய்வமாக கொண்டாடிய நீயா இப்படி கமலை திட்டுவது?

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...