Skip to main content

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை


 உலகப் பொதுமறை திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னது போல இல்லாத ஒருவருக்கு உதவி செய்வதே தலை சிறந்த தானமாகும்.

இதை உலகில் மிகப் பெரிய அளவில், மிகச் சிறப்பாக நிரூபித்துக் கொண்டிருக்கும் இருவர் Bill Gates மற்றும் Warren Buffett. உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய சொத்தில் பெரும் பகுதியை பல்வேறு நலத் திட்டங்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்கள்.

எங்கோ அமெரிக்காவில் பிறந்து, Microsoft என்ற பெரும் நிறுவனத்தினை நிறுவியதின் மூலம் வரும் வருவாயை இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு செலவிடுவதில் Bill Gates க்கு என்ன லாபம்? இந்திய அரசாங்கம் ஒதுக்கிய தொகையை விட Bill Gates செய்து வரும் உதவி பெரியது. இந்தியாவிலும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் இதைப் போன்ற நலத் திட்டங்களுக்கு உதவுகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் எதுவும் உதவவில்லை என்பது தெரியும்.

Altruism என்ற ஆங்கில வார்த்தைக்கு சுயநலமில்லாத சேவை என்று பொருள். இதற்கு எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவில் இரண்டே பேரைத்தான் உதாரணமாக சொல்ல முடியும்; இருவருமே இப்போது உயிருடன் இல்லை-ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் அன்னை தெரஸா.

இதைப் போல சேவை மனப்பான்மை ஒருவருடைய மரபணுவிலேயே (genes) இருக்கிறது என்கிறது விஞ்ஞான ஆராய்ச்சி. Richard Dawkins எழுதிய "The Selfish Gene" என்ற புத்தகத்தில் இதை விளக்குகிறார்.ஒவ்வொருடைய மரபணுவும் selfish ஆக இருந்தால் மட்டுமே evolution எனப்படும் பரிணாம வளர்ச்சியில் தொடர்ந்து இருக்க/வளர முடியும் எனபதே அவருடைய தியரி.

எங்கோ பிறந்த Bill Gates இந்தியாவில் இருக்கும் AIDS நோயாளிகளுக்கு உதவும் போது, இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி திருப்பதி கோயிலுக்கு தங்க விமானம் வேய இரண்டு கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்துள்ளார். இது தானம் அல்ல, சுய நலம், விளம்பரம், பாவ பரிகாரம்...எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இவரைத் தவிர மற்ற பெரும் பணக்காரர்கள் இந்தியவில் வறுமை ஒழிய எதுவும் உதவி செய்வதில்லை. அரசியல்வாதிகளிடம் நாம் இதை எதிபார்க்க முடியாது. எப்படி தானம் செய்யும் உணர்வு ஒருவருடைய மரபணுவில் இருக்கிறதோ, அதே போல மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பதும் அதே மரபணுவில் இருக்க சாத்தியம் இருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். தலைமுறை, தலைமுறையாக மக்கள் சொத்தை திருடி, கோடிகளில் பணத்தை வைத்துக் கொண்டு அதை செலவு செய்ய திரைப் படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு, மேலும், மேலும் பணத்தை ஈட்டும் வித்தை தமிழ்நாட்டில் ஒரு குடுமபத்துக்கு கை வந்த கலை.

லண்டனில் சில வருடங்களுக்கு முன் நடந்த தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பில் இறந்த ஒரு பெண்ணின் பெற்றோருக்கு இங்கிலாந்து அரசு உதவித் தொகை வழங்கிய போது, அதை அப்படியே எடுத்து இந்தியாவில் உள்ள பார்வையிழந்த குழந்தைகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிட்டனர். Altruism என்ற வார்த்தைக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் வேண்டுமா?

நலத் திட்டங்களுக்கு உதவி செய்ய நாம் Bill Gates அல்லது Warren Buffet போல பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அங்கங்கே, நம்மால் முடிந்த அளவு இல்லாதவர்க்கு உதவி செய்வதே பெரிய விஷயம். பிச்சைக்காரர்களுக்கு பிச்சையாக பணம் கொடுப்பதை விட ஏதேனும் உணவுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். என்னுடைய காரில் எப்போதும் நான்கைந்து பிஸ்கட் பாக்கட்டுகளை வைத்திருப்பேன். சிக்னலில் கார் நிற்கும் போது பிச்சை கேட்டு வரும் குழந்தைகளுக்கு அதை கொடுப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.படிப்பு உதவி கேட்டு வீட்டுக் கதவைத் தட்டும் குழந்தைகளுக்கு புத்தகங்களும், துணியும் வாங்கிக் கொடுக்க என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன். 

அரசியல்வாதிகளையும், அரசாங்கத்தையும் எதிர்ப்பார்த்து காத்திருக்காமல் நாமே, நம்மால் முடிந்த அளவு நம்முடைய இந்த சமுதாயத்திற்கு உதவி செய்வோம். இந்த 63 ம் சுதந்திர தின விழாவில் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். ஜெய் ஹிந்த்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.