Skip to main content

ரூ.50,000/- ஐஸ்க்ரீம்


பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த செய்தியே உதாரணம்: நியூ யார்க் நகரில் உள்ள "செரண்டிபிட்டி (Serendipity)" என்ற ரெஸ்டாரண்டில் அதனுடைய 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஒரு மிக விலையுயர்ந்த Grand Opulence Sundae என்ற ஐஸ்க்ரீம் ஒன்றை 1000 அமெரிக்கன் டாலருக்கு (சுமார் ரூ.50,000/-) அறிமுகம் செய்துள்ளனர். இதன் சிறப்புகள்:
  1. தஹிதி மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளில் விளையும் மிக உயர்ந்த வகை வனிலா பருப்பிலிருந்து இதன் வனிலா க்ரீம் எடுக்கப்படுகிறது.
  2. உலகிலேயே விலை உயர்ந்த "அமேடி போர்சிலானா (Amedei Porceleana) என்ற சாக்லேட் இதில் சேர்க்கப்படுகிறது. 
  3. மேலும் விலையுயர்ந்த வெனிசுலா (Venezuela) நாட்டைச் சேர்ந்த சாக்லேட்டும் சேர்க்கப்படுகிறது. 
  4. பாரிஸ் நகரிலிருந்து வரவழைக்கப்படும் செர்ரி பழங்கள், மார்ஸிபான், மற்ற விலையுயர்ந்த பழங்களும் சேர்க்கப்படுகின்றன. 
  5. பிரான்ஸ் நாட்டில் அர்மனாக் பகுதியிலிருந்து வரவழைக்கப்படும் மிக உயர்ந்த வகை பிராந்தி சேர்க்கபடுகிறது. 
  6. தங்கத்தை மிக லேசாகத் தட்டி அதில் கிடைக்கும் தங்க இலை (gold foil) சேர்க்கபடுகிறது (நம் நாட்டில் பெரும்பாலான இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் வெள்ளி இலை (Silver foil) வெள்ளியால் ஆனது அல்ல; அலுமினியத்தால் ஆனது. உடலுக்கு மிகத் தீங்கு விளைவிக்கக் கூடியது). 
  7. எல்லாவற்றுக்கும் மேலாக Grand Passion Caviar எனப்படும் மிக அரிதான, விலையுயர்ந்த மீன் முட்டைகள் சேர்க்கப்படுகின்றன. இவை விளக்கு வெளிச்சத்தில் தங்கத்தைப் போல ஜொலிக்கும் தன்மை உடையவை.
  8. இதை எல்லாவற்றையும் ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து, சாப்பிட ஒரு தங்க ஸ்பூனும் தருகிறார்கள்.
சாப்பிட்டு விட்டு 1000 அமெரிக்க டாலர்களை கொடுத்துவிட்டு நீங்கள் வீட்டுக்குப் போகலாம். 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...