Skip to main content

சின்ன வீடா வரட்டுமா?

சின்ன வீடு என்றாலே ஜொள்ளு விடாத ஆண்கள் மிகக் குறைவே. அப்படி இருந்தால் ஒன்று அவர்கள் 16 வயதுக்குக் கீழேயோ அல்லது 60 வயதுக்கு மேலேயோதான் இருப்பார்கள். இது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் பெண் வர்க்கம் குரல் கொடுத்து வந்தாலும், நிறைய பெண்கள் இதுவும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கைதான் என்கிறார்களாம்; ஓகே, இங்கு இல்லை, அமெரிக்காவில்.

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒரு பெண் "இன்னொரு பெண்ணாக" இருப்பதின் வசதிகளை பட்டியலிட்டுள்ளது ஒரு அமெரிக்க இணைய தளம்

1. ஒரு ஆணின் மற்றொரு பெண்ணாக இருப்பதால் நீங்கள் அவனுக்கு பிடித்த வெங்காய சாம்பார் செய்ய வேண்டிய அவசியமில்லை. கஷ்டப்பட்டு செய்துவிட்டு, "என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கற சாம்பார் மாதிரி வராது," என்ற வார்த்தைகளை கேட்க வேண்டியது இல்லை.

2. அவனுடைய சட்டைக்கு இஸ்திரி போடுவது, பேங்க் வேலைகளைப் பார்ப்பது, அவனுடைய மாமாவுக்கு வெந்நீர் வைப்பது போன்ற அடிமைத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டியதில்லை.

3. . அவனுக்கு பயந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான உடலைக் கவ்விக் கொள்ளும் உடைகளையோ, செக்ஸியான அலங்காரம் செய்து கொள்வதையோ தியாகம் செய்ய வேண்டியதில்லை. மாறாக, அவன் உங்களை மேலும் செக்ஸியாக இருக்கத் தூண்டுவானே தவிர, மறுக்க மாட்டான். இதில் இந்த "Tube Top, Lehange, Wrap Around." போன்ற ஆடைகளையும், அலங்கார சாதனங்களையும் அவனே வாங்கிக் கொடுத்து விடுவான்.

4. இங்கு நீங்கள் அவனுக்கு பணிவிடை செய்து tired ஆக மாட்டீர்கள், மாறாக, அவனுடைய கொஞ்சல்களும், முத்தங்களும்தான் உங்களை tired ஆக்கும்.

5. அவனுடைய ஆபீஸ் பார்ட்டி என்ற பெயரில் அவனுடைய முட்டாள் பாஸின் மனைவியின் கேவலமான உடை அலங்காரத்தை புகழ்ந்து பேசவோ, அங்கே கிடைக்கும் வாயில் வைக்க முடியாத சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, "oh, excellent dish," என்றெல்லாம் பொய்யாக புகழத் தேவையில்லை.

6. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தலை சொட்டையாகி, வயிறு பெருத்து, கிழவனாக மாறும் போது அவனைச் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஓகே, இது பெண்களுக்கு என்னென்ன வசதிகள் என்ற பட்டியல். இந்த மாதிரி ஒரு செட்டப்பின் மூலம் ஆண்களுக்கு என்னென்ன வசதிகள் என்பதை இங்கு சொல்ல முடியாது, காரணம் பெரும்பாலான பெண்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

நன்றி: msn.com

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...