Skip to main content

வினோத கடத்தல் நாடகம்





உலகில் பல இடங்களில் நடக்கும் அக்கிரமங்களில் இது புது வகை குற்றம்: மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் சில நகரங்களில் கில்லாடித்தனமாக ஒரு கூட்டம் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பொழுதுபோக்கும் இடங்களில் அவர்களை அணுகி விலையுயர்ந்த செல் போன், ஐ பாட் ஆகியவற்றை பரிசாகப் பெற வேண்டுமென்றால் ஒரு form இல் அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண், படிக்கும் பள்ளி/கல்லூரியின் விவரம், பெற்றோர் பெயர், அவர்கள் வேலை விவரம், வேலை செய்யும் இடம், மாணவர்களின் பிரியமான நிறம், விளையாட்டு, பிடித்த நடிகர் என அத்தனை புள்ளி விவரங்களையும் பெற்று விடுகிறது.

பிறகு இந்த கூட்டம் மிகத் திறமையாக திட்டம் தீட்டி அந்த மாணவர் கும்பலில் பணக்கார மாணவர்களாகத் தேர்வு செய்து, நேரம் பார்த்து அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து உங்களயுடைய வாரிசை நாங்கள் கடத்தி விட்டோம், அவர்களை மீட்க வேண்டுமென்றால் உடனடியாக உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கும் கருப்பு வேனின் பின்னால் ஒரு பெட்டியில் நகையோ அல்லது பணமோ அல்லது இரண்டுமோ வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என மிரட்டி அவர்களுடைய வாரிசுகளின் விவரங்களை வரிசையாக சொல்லும் போது பெற்றோர் மிகவும் பயந்து விடுகின்றனர்.

இந்த கடத்தல் கும்பல் பெற்றோர்க்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல் செயல்பட்டு, புத்திசாலிதனமாக பணம் மற்றும் பொருளை கைப்பற்றி விடுகிறது.

இதையும் மீறி ஒன்று, இரண்டு பேர் எங்கள் மகன்/மகள் உன்னிடம் இருப்பதற்கு என்ன சாட்சி என்று கேட்டால் அவர்களை மிரட்டுவதற்கு அந்த வாரிசுகளின் தனிப்பட்ட விவரங்களை சொல்லி, மேலும் ஏதாவது தாமதம் செய்தால் வாரிசுகளின் உயிர் போய்விடும் என மிரட்ட, பயந்து போகும் பெற்றோர் உடனடியாக பணயத் தொகையை கொடுத்துவிடுகின்றனர்.

பின்னர் அந்தப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி/கல்லூரியில் கேட்கும்போது அப்படி எதுவும் விபரீதம் நடக்கவில்லை எனதெரிந்து ஏமாறுகிறார்கள். இப்படிப்பட்ட கேஸ்கள் பெரும்பாலும் காவல்துறையை அணுகுவதேயில்லை. பிள்ளைகள் கடத்தப்பட்டு விட்டனர் என நினைத்து பணம் மற்றும் பொருளை இழந்தோர் ஏராளம் என்கிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை.

Comments

Popular posts from this blog

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...