Skip to main content

தசாவதாரம் விமர்சனம்




ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள தசாவதாரம் படம் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்வேன்.

கமல் 10 வேடங்களில் வருவது ஒரு பக்கம் என்றால், CG எனப்படும் special effects செய்தவர்கள், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒப்பனை கலைஞர்கள், பின்னணி இசை அமைத்த தேவிஸ்ரீ பிரசாத், முக்கியமாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் frame இல் ஆரம்பித்து கடைசிவரை அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

இந்த 10 வேடங்களையும் கமல் கோர்த்திருக்கும் விதம் அசாத்தியமானது. 12 ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கும் கதை கோடுபோட்டது மாதிரி பயணம் செய்து கிளைமாக்சை எட்டும்போது ஆச்சரியம் மேலோங்குகிறது.

அசின் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி வந்தாலும் நல்ல ஜிலுஜிலு எலுமிச்சம் பழம் மாதிரி வருகிறார். ரொமான்ஸ் காட்சிகள் குறைவு என்றாலும் படத்தின் ஓட்டத்தை பாதிக்கக் கூடாது என்று இயக்குனரும் கமலும் மெனக் கெட்டிருப்பது தெரிகிறது.

படத்தில் ஏராளமான நிறைகள் இருப்பதால் வெகு சொற்பமான குறைகளே தெரிகின்றன. அவற்றில் முக்கியமானது: திரைக்கதை. ஜீனியஸ் கமலுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து வசனம், திரைக்கதை ஆகியவற்றை நீங்கள் அந்தந்த துறையில் வல்லுனர்களிடம் விடுவது நல்லது.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அதன் technical wizardry எனப்படும் மேலோங்கிய தொழில் நுட்பம் நச்சென நம் மனத்தில் பதிகிறது. கமலின் 10 வேடங்களில் என் ஓட்டு துப்பறியும் நிபுணராக வரும் நாயுடுவுக்கே. மனிதர் சும்மா கலக்கி விட்டார். இரண்டாவது இடம் பூவராகவனுக்கு.

எல்லோரும் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...