Skip to main content

கோமாளி ஜார்ஜ் புஷ் பொறுப்பில்லாத பேச்சு!













அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போல ஒரு கிறுக்குக்.... எங்கும் பார்க்க முடியாது. ஜனாதிபதி ஆன நாள் முதல் அமெரிக்க மக்களையும், உலக மக்கள் யாரையும் நிம்மதியாக வாழ விடுவதில்லை.

ஈரான், இராக் மீது போர், ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் என்று எதாவது ஒரு குளறுபடி செய்துகொண்டிருக்கும் இந்த கேனக் கபோதி, சமீபத்தில் திருவாய் மலர்ந்து, " உலகெங்கிலும் உணவு பற்றக்குறை வர இந்தியா மற்றும் சைனா தான் காரணம். ஏனென்றால், இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டிருப்பதால் அவர்கள் எல்லோரும் நல்ல, தரமான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால் உணவுத் தட்டுப்பாடு வந்துவிட்டது," என்று உளறி இருக்கிறது.

இந்தியாவில் மத்திய தட்டு (middle class) மக்களின் எண்ணிக்கை சுமார் 350 மில்லியன், இது அமெரிக்க ஜனத் தொகையை விட அதிகம். தற்போது, இதில் பெரும்பாலானோர் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதால் அவர்கள் சாப்பிடும் உணவு அளவு அதிகமாகி விட்டது என்று அமெரிக்காவின் செக்ரடரி ஆப் ஸ்டேட் காண்டலீசா ரைஸ் கருத்து தெரிவித்துள்ளது மிகப் பெரிய முட்டாள்தனம்.

இந்தியாவில் எந்த மட்டும் வறுமை ஒழிந்திருக்கிறது, எந்த மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். நம்மை நம் அரசியல்வாதிகள் கொடுமைப் படுத்துவது பத்தாது என்று இந்த மாதிரி வெளிநாட்டு பன்னிகள் வேறு உள்ளே புகுந்து குட்டையை குழப்புகிறார்கள்.

சொல்லமுடியாது. அமெரிக்க அரசாங்கத்தைக் கண்டாலே பேதி போகும் நம் அரசு, திடீரென்று, இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று சட்டம் கூட கொண்டு வரலாம்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...