ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டகஹிரோ புஜினுமா எனும் 37 வயது வெட்டி officer கைதாகி இருக்கிறார். அவர் செய்த குற்றம்? வேலைவெட்டி இல்லாமல் telephone directory யை வைத்துக்கொண்டு ஒவ்வொரு பெண்ணாகக் கூப்பிட்டு "டார்லிங்" என்று ஆரம்பித்து ஏதேதோ உளறிக்கொண்டு இருந்திருக்கிறார். இதுவரை சுமார் 2600 பெண்களைக் கூப்பிட்டு இதே பாணியில் கலாய்த்திருக்கிறார். போலீஸ் இவரைப் பிடித்தவுடன், "இந்த மாதிரி பெண்களுடன் பேசும் போது அவர்கள் என்னைக் கண்டபடி திட்டுவார்கள், அவர்கள் திட்ட ஆரம்பித்தவுடன் எனக்கு மிகவும் சுகமாக இருக்கும்" என்று சொல்லியிருக்கிறார். மறை கழண்டு எப்படி எல்லாம் அலைகிறார்கள் பாருங்கள்!
நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...
Comments