எங்க ஊரு வாசம் ---பாரத தேவி உண்மையான கிராமத்து வாழ்க்கை எப்படியிருந்தது, இயந்திரமயமாகி விட்ட வாழ்வில் நாம் என்னவெல்லாம் தொலைத்துவிட்டோம் என நினைத்து பெருமூச்சு விடவைக்கும் ஒரு அருமையான பதிவு..... வாழ்வோடு கலந்த பொங்கல் தைமாதம் பிறக்கப் போகிறது. அதனால் விவசாயிகள் எல்லோரும் ரொம்பவும் மகிழ்ச்சியாயிருந்தார்கள். ஏனென்றால் காடுகளிலும், வயல்களிலும் விளைந்த தானியங்களை எல்லாம் வீடு கொண்டு வந்து சேர்த்தாகிவிட்டது. அவை பெரிய, பெரிய குலுக்கைகளிலும், மூடைகளிலுமா வீடு நிறைந்து இருக்கின்றன. அதோடு இருந்த தட்டை, தாள்களை அறுத்துக்கொண்டு வந்து ஆடு, மாடு தீவனங்களுக்காக உயரமும் நீளமுமான படைப்புகளாக அடுக்கியாகிவிட்டது. பிரிந்தும் தளர்ந்தும் இருந்த மழைக்கு ஒழுகிக்கொண்டு இருந்த கூரை வீடுகளைப் பிரித்து கம்பந்தட்டை, தரகு, பனைஓலை என்று கொண்டுவந்து கச்சிதமாக வேய்ந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு வீடு ஒழுகுமே என்ற கவலை இல்லை. புதுத் தானியமும், புதுக் கூரையும், புதுப் படப்பின் மணமுமாக மேகாற்றோடு வீசி கிராமம் எங்கும் மணம் பரப்ப, விவசாயிகளும், அவர்களின் குடும்பங்களும் நெஞ்சு நிறைய சுவாசித...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!